internet

img

என் முதல் நடுவர் - மதுக்கூர் ராமலிங்கம்

என் முதல் நடுவர் மறைந்தார். 

தோழர் வெ.சுந்தரம் இன்று மறைந்தார். அவர் ஒரு காலத்தில் 

பட்டி மன்றங்களிலும் பேசிக் கொண்டிருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திபனூரில் ஒரு வழக்காடுமன்றம். தமிழ் சினிமா தரம் தாழ்ந்ததந்தற்கு காரணம் ரசிகர்களே என வழக்கு தொடுக்க தோழர். அ.குமரேசன் மறுத்தார். ஒரு வயலுக்குள் மேடை போட்டு நிகழ்ச்சி நடந்தது. கூட்டம் 30 பேருக்குள்தான் இருக்கும். இருந்தாலும் 3 மணி நேரம் பேசினோம். தீவிரமான ஆராய்ச்சி - அப்போது எனக்கு சுட்டுப் போட்டாலும் நகைச்சுவை வராது. பட்டி மன்றமுதல் மேடை என்பதால் பதட்டமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்களுக்கு பேச்சு வரும், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்றார் வெ.சுந்தரம். உங்கள் இறுதி நிகழ்ச்சியில் பேசினேன் வி.எஸ். நீங்கள் எதுவும் சொல்லவில்லையே தோழா.நான் தீக்கதிர் அலுவலகத்தில் நுழைந்தவுடன் பார்க்கும் முதல் முகம் நீங்கள்தானே வி.எஸ்.இனி அலுவலகம் வர மாட்டீர்கள் அல்லவா?

-mathukkur ramalingam


;